திருமண தோஷத்துக்கு என்ன பரிகாரம்?
திருமணம் என்பது
ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை
அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள்
செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை
சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு
கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள்
ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.
ஜாதக தோஷங்கள் என்ன?
பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.
செவ்வாய் தோஷம்:
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
ராகு - கேது தோஷம்:
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.
மாங்கல்ய தோஷம்:
இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.
சூரிய தோஷம்:
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
களத்திர தோஷம்:
களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.
மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.
தோஷமும் பரிகாரங்களும்:
செவ்வாய் தோஷம்:
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
ராகு-கேது தோஷம்:
திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.
சூரிய தோஷம்:
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
களத்திர தோஷம்:
சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.
ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும்
இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது
நாகதோஷமாகும். லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது
நாகதோஷம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து
உண்டாகலாம்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது. லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும்.
ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும். லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.
தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும், லக்னம், அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால், விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு,
ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம். இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும்.
12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்மாந்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ, அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்சத்திரமாக வரும் ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.
ஜாதக தோஷங்கள் என்ன?
பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.
செவ்வாய் தோஷம்:
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
ராகு - கேது தோஷம்:
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.
மாங்கல்ய தோஷம்:
இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.
சூரிய தோஷம்:
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
களத்திர தோஷம்:
களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.
மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.
தோஷமும் பரிகாரங்களும்:
செவ்வாய் தோஷம்:
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
ராகு-கேது தோஷம்:
திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.
சூரிய தோஷம்:
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
களத்திர தோஷம்:
சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.
ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஜாதக அமைப்பு படி நாகதோஷம்
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது. லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும்.
ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும். லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.
தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும், லக்னம், அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால், விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு,
ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம். இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும்.
12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்மாந்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ, அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்சத்திரமாக வரும் ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
சனி:
(மங்கு சனி,
பொங்கு சனி)
பரிகாரம்
செய்வது எப்படி?
சனி கிரக
பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும்
ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம்
பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு
வருவது கூடுதல் பலன்களை தரும்.
ஏழரைச்சனி:
ஜாதகத்தில்
சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு
உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை
சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை
அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின் இருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால்
ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
சனீஸ்வர பகவான்
ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு
12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 2+3=7 ஆண்டுகள் ஆகும்.
இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை சிரசு சனி என்றும் 1-ல் சனி
சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும்
கூறுவர்.
ஒருவர் வாழ்வில்
ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது
முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும்.
கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.
ஒவ்வொருவர்
வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு
ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால்
தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு
பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.
சனி பவானுக்குரிய
கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும்
செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு
தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம்
ஆகும்.
சைவர்களாக
இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன
மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது
ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.
கந்த சஷ்டி
கவச பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும்.
தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர
பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும்.
சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா?
காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.
இதனை அவரவர்
ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி
பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது
ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின்
உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை,
சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை.
சனி பகவான்
ஸ்தான பலன்கள்
சனிபகவான்
உச்ச, ஆட்சி, நீச வீடுகளில் அளிக்கும் பலன்களைக் காண்போம். சனி பகவான் துலாத்தில் உச்சம்
அடைகிறார். மேஷத்தில் நீசம் அடைகிறார். மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் ஆட்சி பெறுகிறார்.
சனி பகவான் உச்சம் பெற்றிருப்பாரானால் அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து பலரது
பாராட்டைப் பெறுவார்.
மனோதிடம்,
தீர்க்காயுள் பெற்று தொழில் துறையில் சிறந்து விளங்குவார். சனி பகவான் ஆட்சி பெற்றிருப்பாரானால்
சுகபோக வாழ்க்கையுண்டாகும். தொழில் வளம் சிறக்கும். விவசாய நன்மை விருத்தியாகும். வாகன
யோகமுண்டு. பிரயாண லாபம் உண்டாகும். சனி பகவான் நீசம் பெற்றிருப்பாரானால் நாத்திக வாதம்
புரிவார்.
சாஸ்திர சம்பிரதாயங்களை
நம்ப மாட்டார். எதற்கும் மனோ தைரியம் இருக்காது. கீழ்த்தரமானவர்களுடன் நட்பு கொள்வார்.
கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய வீடுகளில் சனி பகவான் பகை பெறுகிறார். சனி பகவான்
பகை வீட்டிலிருப்பாரானால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கும். எதிலும் எப்போதும் ஒருவித
சலிப்பான உணர்வு மிகுந்து காணப்படும். உற்றார், நண்பர் ஆதரவு இருக்காது.
சனி என்பவர்
யார்?
சூரிய பகவான்
த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு,
எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத
சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள்.
அந்த பெண்ணுக்கு
சாயாதேவி என்று பெயரிட்டாள். பிறகு அவள் இனி
நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று
கூறி விட்டு தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன்
மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.
இவர்களில்
ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான்
என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார்.
சனிபகவானின்
பார்வை
சனிபகவானின்
பார்வையானது மிகவும் தீட்சண்யம் வாய்ந்தது. இளம் வயதில் இருந்தே சனி பார்வை விழிகளில்
அபார சக்தி இருந்தது. அவரது உக்கிர பார்வைபட்டவர்கள் பலம் இழந்து விடுவார்கள் என்பது
ஜதீகமாகும். ஒரு சமயம் சிவனிடம் அரிய வரம் பெற்ற ராவணன் நவக்கிரகங்களை அடக்கி தன் வீட்டில்
படிக்கட்டுகளாக குப்புறப்போட்டு வைத்திருந்தான்.
அதை பார்த்த
நாரதர், ராவணா சனியை நேருக்கு நேர் பார்க்க பயமா? என்று கேட்டார். உடனே ராவணன் ஆவேசத்துடன்,
சனியே என்னை நன்றாக நிமிர்ந்து பார் என்று கூறினான். சனியும் நிமிர்ந்து பார்க்க, மறு
வினாடியே ராவணனிடம் இருந்த சக்தி பலம், வீரம், வரம் எல்லாம் போய் விட்டது அவனை ராமர்
மிக எளிதாக வென்றார்.
சனியின் பார்வைக்கு
இத்தகைய அபார சக்தி உண்டு. சனி பார்வை தனித்துவம் கொண்டது என்பதற்கு இது போன்று பல
உதாரணங்களை சொல்லலாம்.
சனி பகவானின்
குணம்
ஓருவரது ஜாதகத்தில்
சனி பகவான் உச்சம் பெற்று இருந்துவிட்டால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால்
உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்டவைப்பார். சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான்
ஒரு மனிதனின் நேர்மையை கூற முடியும்.
சனி கெட்டு
நீசம் அடைந்துவிட்டால் காக்கை வலிப்பு மற்றும் நரம்புக் கோளாறுகள் வந்துவிடும். அவ்வாறு
வரும்போது சனிக்குறிய பரிகாரங்களை செய்து மருத்துவரின்
உதவியையும் நாடினால் வெற்றிகள் கண்டிப்பாக உண்டாகும்.
சனி திசையில்
ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே அந்த அனுபவத்தை எங்கும் பெற முடியாது. ஒருவரது வாழ்க்கையில் 7 சனி
வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம்,
கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார்.
அதே சமயத்தில்
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு
நல்வழிப்படுத்துவார். அதே சமயத்தில் மீனம், தனசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து
முன்னேற்றப்பாதையை காட்டுவார். எனவே, நவ்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே உலகம்.
விரயச்சனி
கோசார ரீதியில்
சனி பகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலம் விரயச்சனி ஆகும். இதற்கு
சனிக்கிழமை தவறாது சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம்.
தினசரி காக்கைக்கு அன்னம் இடுவது.
இல்லையென்று
இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்து வருவதும் நலம்.
இது மிகமிக எளிமையானது ஆகும். விரயச்சனி காலத்தில் இதுபோல செய்யலாம்.
`ஜென்மச்சனி'
கோசார ரீதியில்
சனிபகவான் சந்திரன் நின்ற ராசி இல்லத்துக்கே
வந்து நிற்கும் காலம் `ஜென்மச்சனி' இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் முக்கூட்டு
எண்ணெய் (நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய்) விளக்கேற்றி சனி பகவானை வலம் வருவது
நலம்.
இந்த காலத்தில்
பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு
வழங்கலாம். ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ
அல்லது ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
உடலில் பலகீனம்,
நோய் போன்றவை பீடித்து நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும்
சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு.
சனி பகவான்
பெயர் - சனி
பகவான், சனீஸ்வரன், முடவன், மந்தன்
தந்தை - சூரிய
பகவான்
தாயார் -
உஷா, சாயாதேவி
மனைவிகள்
- நீலாதேவி,
சேஸ்டா தேவி
புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி
நண்பர்கள்
- புதன், சுக்கிரன்
சின்னம் - தராசு
மொழி - அந்நிய
பாஷை
ஆசனம் - வில்வ
வடிவம்
பாலினம்
- அலி
சாஸ்திர பெயர்
- மேற்கோள்
கோத்திரம்
- காசியபர்
வடிவம் -
குள்ளம்
நாடி - வாத
நாடி
உடல்உறுப்பு
- நரம்பு (தொடை)
உணவு - எள்ளு
சாதம்
உடமை - ஆயுளுக்கு
முழுப் பொறுப்பு
ரத்தினம்
- கருநீலம், நீலம் பஞ்சபூதத்
தன்மை - ஆகாயம்
குணம் - குரூரர்
நன்மை அடையும்
இடம் - 3, 6, 11 தசை
வருடம் -
19 வருடம் பலன் கொடுக்கும்
பார்வை -
3, 7, 10
ராசி சஞ்சாரம்
- 2 வருடம்
பிணி - வாதம்,
நரம்பு நோய்
பகைவர்கள்
- செவ்வாய், சூரியன், சந்திரன்
கிழமை - சனிக்கிழமை
பூஜிக்கும்
தேவதை - துர்க்கா, சாஸ்த்தா
பெற்ற பட்டம்
- ஈஸ்வர பட்டம்
பரிகார தலங்கள்
- 1. திருநள்ளாறு, 2. குச்சனூர், 3. திருக்கொள்ளிக்காடு
திசை - மேற்கு
அதிதேவதை
- எமன்
தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
இனம் - சூத்திரர்
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம்
- எள்
மலர் - கருங்குவளை மற்றும் வன்னி
ஆடை - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலமணி
சுவை - கசப்பு
சமித்து - வன்னி
உலோகம் -
இரும்பு
பயன் - நோய்,
வறுமை, சிரமங்கள், நீங்குதல்
தீபம் - எள்ளு
தீபம் ஆட்சி
வீடு - மகரம்,
கும்பம்
உச்ச வீடு
- துலாம்
நீச்ச வீடு
- மேஷம்
நட்பு வீடு
- ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
சம வீடு
- விருச்சிகம்
பகை வீடுகள்
- கடகம், சிம்மம்
சனியைப் போல
கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை
ஜோதிட விதிப்படி
ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாக
கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். கோட்சார
ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய
கிரகமாக சனிபகவானே இருக்கிறார்.
சனியைப் போல
கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். சனி பகவான் 12 ராசியை சுற்றிவர
30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள்
தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு
சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர்.
குறிப்பாக
சனிபகவான் 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை
ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம்
தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக்
கூடிய வலிமை வல்லமை. உடல்நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.
ஆனால், சனி
பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை
உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள்.
ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1-ல் சஞ்சரிக்கும் காலத்தை
ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.
இக்காலங்களில்
உடல்நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள்,
தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும்.
பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும். சனி 4-ல் சஞ்சரிக்கும்
காலங்களை அத்தாஷ்டம சனி என்கிறோம்.
இக்காலங்களில்
தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். சனி 7-ல்
சஞ்சரிப்பதை கண்ட கனி என்கிறோம். இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்பு, கணவன்-மனைவி
யிடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடு, கூட்டுத் தொழிலில்
வீண் பிரச்சினைகள், விரயங்கள் உண்டாகும். சனி 8-ல் சஞ்சரிக்கும்போது, அஷ்டம சனி உண்டாகிறது.
இக்காலங்களில்
அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல்நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால்
மருத்துவச் செலவுகள் உண்டாகும். குறிப்பாக சனிபகவான் சாதகமற்று சஞ்சரிக்கும்போது சிலருக்கு
அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜெனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும்
அஷ்டம சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
தொழில் ஸ்தானமான
10-ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல. சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜெனன
காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய மகரம், கும்பம், துலாகத்தில் அமைந்திருந்தாலும் சனியின்
நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும்
சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது.
பாதச்சனி:
கோசார ரீதியில்
சனிபகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் காலம் பாதச்சனி ஆகும். இதனால்
குடும்ப சூழ்நிலையிலும் தன வருவாயிலும் சில சிக்கல்கள் நேரலாம். இதற்கு சனிக்கிழமையில்
எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி, சனிபகவானை வழிபட்டு எள் அன்னம், நைவேத்தியம் செய்து
ஆராதித்து, அதனை ஏழைகளுக்கு வழங்கி, அப்படிப் பெறுகின்ற ஏழைகளுக்கு சில்லரைகளையும்
தான தர்மங்களையும் செய்யலாம்.
வீட்டிலும்
தினசரி சமைத்த உணவை உண்ணுவதற்கு முன்பு காக்கைக்கு வைத்து அது உண்ட பின்பு உண்பது நலம்.
ஒரு தேங்காயை பசுவாக ஆவாகனித்து ஆத்ம சுத்தியுடன் ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் போதும்.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவற்றை நடத்தினால்
நல்லது.
மங்கு சனி, பொங்கு சனி
சனி சூரிய
குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கிரகம் ஆகும். சூரியக் குடும்பத்தில்
இது இரண்டாவது பெரிய கோளாகும். வளி அரக்கக் கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். சனிக்கோள்
ஐதர்சன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒரு சில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது.
இது பாறை
மற்றும் கனிக்கட்டியிலான சிறிய உள்ளகமும் அதைச்
சுற்றி தடிமனான உலோக (மாலை) ஐதரசன் அடுக்கும்
அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில்
காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கி.மீ. மணி வரையிலும் இருக்கக்
கூடும்.
சனிக்கிகோளின்
சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனிகிரகத்தில் மொத்தம் 61 நிலவுகள் உள்ளன.
இதைத் தவிர சுமார் 200 நிலவுக்குட்டிகள் சனிக்கு உள்ளன. கிரக வளையங்கள் கொண்ட சனி சூரிய
குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக
விளங்குகிறது.
இவ்வளையங்கள்
சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீ. லிருந்து 120700 கி.மீ.வரை நீண்டிருக்கிறது.
சனி கிரகத்துக்கு சனைச்சரன் என்றும் மந்தன் என்றும் சனை என்றால் மெள்ள அதாவது மெதுவாக
என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் சனி எடுத்துக் கொள்கிறார்.
விண் வெளியில்
அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் இவர் வெகு
தொலைவில் இருப்பவர், சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம் அவரிடமிருந்துதான்
கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின. ராசி மண்டலத்தை ஒரு முறை வலம் வருவதற்கு,
சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை.
அதாவது ஒருவருது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒரு
முறை 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல்
வலத்தை மங்கும் சனி, அடுத்ததை பொங்கும் சனி, மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்.
இப்படி முன்றாகப்
பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும்
சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம். அதாவது இளமைப்
பருவம் எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு அலசி ஆராயும் திறனுடன், நல்லது, கெட்டதை
அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது.
துன்பங்களைத்
தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும்,
சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது. மூன்றாவது, முதுமை தேக
ஆரோக்கியமும் மனோபாலமும் குறைகிற இறுதிப் பகுதி. சிறு வயதில் கல்வியைக் கிரகிக்கும்
தருணத்தில் சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும் போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும்.
மனதில் பதிந்த
எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில்,
சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர். இளமையில்
வளர்ச்சியுற்று எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து சனி பகவானின் தாக்கம் கட்டுகடங்காத ஆசைகளை அவனுக்குள்
வளர்ந்தோங்க செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர்.
இன்ப- தன்பம்
நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான்.
இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின்
தாக்கத்தை, திருப்பத்தை நிறைவேற்றும் வகையில்
திசை திருப்ப முடியும்.
ஆகவே பொங்கு
சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர். முதுமையில் சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை
எதிர் கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி
தன்னை இணைத்துக் கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன்
செயல்பாடு உதவும், ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக்காட்டி,
போக்கு சனி என்றனர்.
ஆக, முதல்
பகுதி வளரும் பருவம், 2-ம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கிற பருவம்
இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத்
தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.
ஈஸ்வரர் பெயர்
வந்த கதை
சூரியனுக்கு
உஷாதேவி(சுவர்க்கலாதேவி) சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா
என்ற மகன்தான் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். கருமை நிறம் கொண்ட சனீஸ்வரனுக்கும்
ஒளியாக மின்னும் சூரியனுக்கும் பகை உணர்வு
ஏற்பட்டது.
சனி பகவானுக்கு
சிவன் மீதுதான் பக்தி அதிகமாக இருந்தது. சிவனுக்கு நிகரான நிலையை அடைய வேண்டும் என்று
விரும்பிய சனிபகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை நிறுவி கடும் தவம் செய்தார். அவரது
பக்தியை கண்டு மனம் இரங்கிய சிவபெருமான்"உனக்கு என்ன வரம் வேண்டும்'' என்று கேட்டார்.
அதற்கு சனி,
"எனக்கு என் தந்தை சூரியனை விட அதிக பலமும் பார்வையும் வேண்டும். என் பார்வையில்
இருந்து யாரும் தப்பக்கூடாது. என் பார்வைபட்டால் மற்றவர்கள் தங்கள் பலத்தை இழந்து விட
வேண்டும். நவக்கிரகங்களில் எனக்கு மட்டுமே அதிக பலம் வேண்டும்.
சுருக்கமாக
சொல்ல வேண்டுமானால் தங்களுக்கு அடுத்த இடத்தை
எனக்கு தர வேண்டும்'' என்றார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உனக்கும்
ஈஸ்வரன் என்ற பட்டம் தருகிறேன். இன்று முதல் நீ சனீஸ்வரன் என்று அழைக்கப்படுவாய் என்றார்.
இப்படித்தான் சனிக்கு ஈஸ்வர அந்தஸ்து கிடைத்தது.
பக்குவப்படுத்தும்
சனி
ஒருவருக்கு
சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம்
இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார்.
முடிவில்
அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும்
நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.
ராசிகளில்
சனி பிறந்த பலன்கள்
மேஷம் முதல்
மீனம் வரை உள்ள ராசிகளில் சனி இருக்கப் பிறந்த பலன் வருமாறு:-
* மேஷத்தில்
சனி நிற்க பிறந்தவர் மூர்க்கனாவார். தொழில் நிமித்தம் அதிகம் சிரமம் அடைய நேரிடும்.
* ரிஷபத்தில்
சனி நிற்க பிறந்தவர் சகோதர நன்மை இல்லாதவராகவும், தொழில், விவசாயம் போன்றவற்றில் தனம்
தேடுபவனாகவும் இருப்பார்.
* மிதுனத்தில்
சனி நிற்க பிறந்தவன் தொழில்நுட்ப அறிவு படைத்தவர். அரசுக்கு ஆலேசானை வழங்குபவராகவும்
இருப்பார்.
* கடகத்தில்
சனி நிற்க பிறந்தவர் ரோகமான தாயாரையுடைவர். தண்ணீரால் வியாதி கண்டம் உடையவர்.
* சிம்மத்தில்
சனி நிற்க பிறந்தவர் பிதுர் துவேஷி, ரோக களத்திரம் உடையவர்.
* கன்னியில்
சனி நிற்க பிறந்தவர் தொழிலில் தனமுடையவர். கடின உழைப்பாளி.
* துலாத்தில்
சனி நிற்க பிறந்தவர், நேர்மையானவர், மூர்க்கன், தனக்காக (அ) தன்னைச் சார்ந்தவர்க்காக
நியாய ஸ்தலம் செல்வார்.
* விருச்சிகத்தில்
சனி நிற்க பிறந்தவர் முன் கோபியாக இருப்பார். கடின உழைப்பாளி, பிணியான மனைவி அமைவாள்.
* தனுசில்
சனி நிற்க பிறந்தவர் சகோதர அன்பை பெற முடியாவராக காணப்படுவார். தொழில் நுட்ப அறிவு
மிகுந்தவராகவும் இருப்பார்.
* மகரத்தில்
சனி நிற்க பிறந்தவர் பெருந்தன்மை மிகுந்தவர். நீதி நெறி தவறாதவர்.
* கும்பத்தில்
சனி நிற்க பிறந்தவர் சதா பிரயாண சுகம் உள்ளவர். சகோதர நேசம் இல்லாதவர்.
* மீனத்தில்
சனி நிற்க பிறந்தவர் தொழில், தனம் உடையவர். தொழில் நுட்ப அறிவுடையவராக திகழ்வார்.
சனி கோர பார்வை
ராஜாவை பிச்சைகாரனாகவும், பிச்சைக்காரனை ராஜாவாகவும் மாற்றும் சக்தி வாய்ந்தது. அதனால்தான்
"சனியை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை'' என்பார்கள். அது நூற்றுக்கு
நூறு உண்மை. ஏனென்றால் சனிபகவான் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவார்.
ஆனால் பிறருக்கு
கெடுதல், தீமை செய்பவர்கள் மீது சனியின் கோரப்பார்வை சனி பிடிக்கும்போது அவர்களை ஏழரை
ஆண்டுகள் சனி பிடித்து ஆட்டி படைப்பார். அப்போது வாழ்க்கை இன்பத்தினை இழந்து, பதவி
மற்றும் இருந்த வேலை இழந்து, வாழ்க்கையே வெறுத்து தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு துன்பத்தினை
அனுபவிப்பார்கள்.
இந்திரனையும்
விட்டு வைக்காத சனீஸ்வரன்
ஒரு சமயம்
தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு
"நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன் என்னை எப்படி நீ பிடிக்கலாம்?'' என்று கேட்டார். அதற்கு சனி பகவான் "என் பார்வையிலிருந்து
எவருமே தப்ப முடியாது'' எனப்பதிலளித்தார்.
"அப்படியானால் நீ என்னைப்பிடிக்கும் நேரத்தைச் சொல்லி விடு'' என்று தேவேந்திரன்
கேட்டார்.
சனி பகவானும்
அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச்சாளி உருவம் எடுத்து சாக்கடையில்
ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்று நினைத்தார். அவர் நினைத்தப்படியே குறிப்பிட்ட
நேரம் கடந்தது. சனி பார்வை தன் மீது படவில்லை என்று இந்திரன் மகிழ்ந்தார்.
சிறிது நேரம்
கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்துக் விட்டதாக
பெருமையாக கூறினார். உடனே சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே நீங்கள் சிம்மாசனத்தை விட்டு
சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால் தான்! என்றார் எங்கு சென்று ஒளிந்து
கொண்டாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
சனி பகவான்
பூஜை
சனிக்கிழமை
காலை குளித்து சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள்,
கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும். சனிக்கிழமை
தோறும் விரதம் இருக்கவும்.
எள்ளை ஒரு
சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு
எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும். பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் சிறிது
எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.
சனிபகவானும்
நோய் பாதிப்பும்
ஜாதகத்தில்
சனி பகவான் பலம் குன்றியவர்களுக்கு நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட வியாதிகளான வாயு,
கை- கால் தொடர் நடுக்கம் என்கிற வியாதி, சிறுநீரகக்
கோளாறு அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் போன்றவை உண்டாகின்றன. ஒருவருக்கு ஏழரைச் சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த
அளவிலாவது ஏற்படும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.
இது ஏழரைச்
சனிக்கு மட்டுமின்றி அஷ்ட மச்சனி, சனி தசைக்கும் பொருந்தும், அது போன்ற நிலையில் உள்ளவர்கள்
சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து அதிகளவில் நடந்து செல்ல பழக வேண்டும். சனி
எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்கு காரணம்.சனியின் ஆதிக்கத்திற்கு உட்படும் போது நடை பயணம் செய்வதன் மூலமே சர்க்கரை
நோயில் இருந்து தப்ப முடியும்.
சனி பற்றிய
53 முக்கிய தகவல்கள்
1. சனியானவர்
ஜன்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில்
சங்கடங்கள் சூழக் கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர்
ஆவார். மந்தமாகப் பேசுவார்.
2. லக்னத்தில்
சனி இருக்கப் பெற்று சனிக்கு அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம்
ஜாதகருக்கு அமையும். ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி
இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத்
தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.
3. மகரம்
அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான
தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.
4. ரிஷபத்தில்
உள்ள சனியானவர் அது ஜன்ம லக்னமானால் சிறப்பான பலன்களைத் தருவார் என்று சில கிரந்தங்களில்
சொல்லப்பட்டிருக்கின்றன.
5. 2-ஆம்
இடத்தில் உள்ள சனி நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம்
ஏற்படக்கூடும். 2-ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக்
கூடும்.
6. சனியானவர்
2-ஆம் இடத்தில் இருந்தாரானால் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று சுகபோகங்களையும்,
செல்வங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்.
7. 2-ல் உள்ள
சனியால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தியுண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.
8. 2-ல் உள்ள
சனிக்குச் சுபபலம் இருக்குமானால் அதாவது ஆட்சி, உச்சம் போன்ற நிலை இருக்குமானால் குறைகள்
குறையவும், நிறைகள் அதிகமாகவும் சந்தர்ப்பமுண்டு.
9. 3-ஆம்
இடத்தில் உள்ள சனி அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். ஆனால், மனோவியாகூலம் அவ்வப்போது
உண்டாகும்.
10. சனியானவர்
3-ல் இருந்தால் ஜாதகருக்குத் தரும குணம் இருக்கும். ஆனாலும் செய்யும் காரியங்களில்
தரக்குறைவு இருந்து கொண்டிருக்கும்.
3-ல் உள்ள
சனி பலம் பெற்றிருந்தாரானால் குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில்
மகிழ்ச்சியும் உண்டாகும்.
11. 3-ஆம்
இடத்தில் உள்ள சனி பலவீனமாக இருந்தாரானால் சகோதரர்களுக்கு நாசம் ஏற்படக்கூடும். தாய்நாட்டை
விட்டு வெளிநாடு செல்லக்கூடிய நிலை ஜாதகருக்கு உண்டாக கூடும். அந்த நிலை நல்லதாக அமைவதற்கு
3-ல் உள்ள சனிபலம் பெற்றிருக்க வேண்டும்.
12. 4-ல்
உள்ள சனி மகிழ்ச்சியைக் கெடுப்பார். அமைதியைக் குலைப்பார். கவலையைக் கொடுப்பார். குடும்பத்திலிருந்து
பிரிய வைப்பார்.
13. -ஆம்
இடத்தில் உள்ள சனியால், தந்தை வழி நலம் குறையும். சொத்துக்கள் சேர்மானம் இராது. இருதயநோய்
ஏற்படக்கூடும். வயிற்றுவலியும் உண்டாகக்கூடும்.
14. 4-ஆம்
இடத்தில் உள்ள சனியினால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும்.
15. பலம்
பொருந்தியவராக உள்ள சனி 4-ல் இருப்பாரானால் ஜாதகருக்குச் சுபிட்சமும், செல்வமும் வாகனவசதியும்
ஏற்படத் தடையிராது.
16. 5-ல்
சனி மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம்
சந்தோஷம் இவைகள் குறையும்.
17. 5-ல்
உள்ள சனி ஜாதகருக்குப் புத்தி மந்தத்தை உண்டு பண்ணுவார். பகைவரால் தொல்லையை உண்டாக்க
கூடும். மனநலம் திருப்திதராது. நேர்வழியில் சிந்தனை செல்லாது. மனோவியாதி உண்டாக கூடும்.
18. 5-ல்
உள்ள சனியின் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம். ஆனால் பொதுவாக ஓர் உன்னதமான வாழ்க்கை பெறுவதற்குச்
சந்தர்ப்பமுண்டு.
19. 8-ல்
உள்ள சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தாரானால் கெட்ட பலன்கள் பெருமளவுக்கு குறைந்து
விடும். நல்ல பலன்கள் இடம்பெறும்.
20. 6-ஆம்
இடத்தில் சனிக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த
சனியினால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.
21. 6-ல்
உள்ள சனி பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம்
தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.
22. பொதுவாக
6-ஆம் இடம் சனிக்கு ஏற்புடைய இடமாகையால் ஜாதகர் கவுரவமாகவும், செல்வ சுகங்களோடும் வாழக்கூடும்.
ஜீரண சக்தியும் ஜாதகருக்கு இருக்கும்.
23. 6-ஆம்
இடத்தில் உள்ள சனியினால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்தச்
சனி பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து
வரும்.
24. 7-ல்
உள்ள சனியினால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.
25. 7-ஆம்
இடத்தில் உள்ள சனி, ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். கீழ்த்தரமான
செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.
26. 8-ல்
உள்ள சனியால் கண்பார்வை மங்கக்கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகக் கூடும்.
27. 8-ல்
உள்ள சனி ஜாதகருக்குப் பணத்தைச் சேர்த்துத் தருவாரே தவிர மதிப்பை தர மாட்டார். ஜாதகர்
அடிமைவேலை செய்ய வேண்டியிருக்கும். சுயமாக பெரிய காரியங்களை நிர்வகிக்கக்கூடிய ஆற்றல்
இல்லாமல் போகும்.
28. 8-ல்
உள்ள சனி இளம் வயதில் ஜாதகருக்கு மகிழ்ச்சியை தரமாட்டார். ஆயுளை தீர்க்கமாகக் கொடுப்பார்.
29. 9-ல்
உள்ள சனியால் ஜாதகருக்குப் பணம் குவியும். மகிழ்ச்சி ஏற்படும். மக்களால் மகிழ்ச்சியுண்டாகும்.
30. சனி
9-ல் இருக்கப் பிறந்தவர்களுக்கு வேதாந்த மனப்பான்மை ஏற்படும். ஜோதிடம் போன்ற கலைகளில்
பாண்டித்யம் உண்டாகும்.
31. 9-ல்
உள்ள சனி பலவீனம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டக்குறைவு உண்டாகும். மற்றவர்களுக்கு
ஜாதகரால் தொல்லை விளையக்கூடும்.
32. பெரும்பாலும்
9-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டில் யோகத்தை உண்டு பண்ணுவார்.
33. 10-ஆம்
இடத்தில் உள்ள சனியானவர் விவசாயம் மற்றும் தானியங்கள், எண்ணெய், உரம் ஆகியவற்றின் மூலம்
ஜாதகர் பொருள் திரட்ட சந்தர்ப்பத்தைத் தேடித்தருவார்.
34. 10-ல்
உள்ள சனி ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார். சிறந்த கல்வி ஜாதகருக்கு உண்டாகும்.
தைரியம் புகழும் ஜாதகரை வந்து சேரும்.
35. 10-ல்
உள்ள சனி ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக
விளங்குவார்.
36. 10-ஆம்
இடத்தில் சனி உள்ளவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்க முடியும். பெரிய குழுவுக்கு ஜாதகர்
தலைமை தாங்கும் சக்தி ஏற்படக் கூடும்.
37. 10-ல்
உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.
38. சனி
11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நிறையச் சம்பாதிப்பார். சொத்துக்கள் சேர்ப்பார்.
நிறைய வருமானம் அடையப் பெறுவார்.
39. 11-ஆம்
இடத்தில் உள்ள சனி மூலம் ஜாதகர் தைரியசாலியாக வாழ முடியும். சரீர சுகம் அமையும். ஆனால்
இளமையில் உடல் உபாதை ஏற்படக் கூடும்.
40. பொதுவாக
11-ஆம் இடத்தில் உள்ள சனியால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் விற்பன்னராக முடியும்.
இரும்பு, விவசாயம், எண்ணெய், உலோகங்கள் ஆகிய துறைகளின் மூலம் ஜாதகர் நிறையப் பொருள்
திரட்டும் வாய்ப்பு ஏற்படும்.
41. 11-ஆம்
இடத்தில் உள்ள சனி பல நிலைகளிலும் சிறப்பைத் தருவார். என்றாலும், குடும்பத்தில் ஜாதகருக்குச்
சிறப்பை உண்டாக்க மாட்டார். ஜாதகரால் குடும்பத்தாருக்கு நலம் உண்டாகவும் விடமாட்டார்.
42. 12-ல்
உள்ள சனி ஜாதகருக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்க மாட்டார். தொழில்களிலும் வீழ்ச்சியை உண்டு
பண்ணுவார்.
43. 12-ல்
உள்ள சனியினால் ஜாதகருக்கு கடும் செலவு உண்டாகக் கூடும். அறிவாற்றல் மங்கியிருக்கும்.
பகைவரால் தொல்லை விளையக்கூடும்.
44. 12-ஆம்
இடத்தில் உள்ள சனிக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால்,
குறைகள் பெரும்பாலும் குறையும். சில நன்மைகள் தலைகாட்டும்.
45. நவகோள்களிலும்
ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.
46. ஒருவரது
ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2 வருட வீதம் 32 1/2 என்ற சஞ்சரிக்கும்
காலம் 7 சனி காலமாகும்.
47. ஒருவரின்
ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8ஆம் இடத்தில்
சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.
48. ஒருவரது
ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை கூட்டி
வழங்குவார்.
49. இந்தியாவில்
திருநள்ளாறில் தனி ஆலயமாக சனீஸ்வரன் மிகப் பிரசித்தம் பெற்று விளங்குகின்றார். இலங்கையில்
திருக்கோணமலையில் மரத்தடியில் சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
50. சனிக்கிரகம்
பூமியில் இருந்து 97 கோடியே 90 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி 3 வளையங்கள்
உள்ளன. இதன் நடுவில் இருள் படலம் உள்ளது. 75000 மைல் விட்டமும் 700 பங்கு கன பரிமானம் உள்ளது. பூமியைப்
போல் 100 மடங்கு எடையுள்ளது. இது ராசி மண்டலத்தைச் சுற்றிவர 29 வருடம் ஆகிறது.
51. சங்கடங்கள்
தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில்
விரதமிருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனிலிருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.
52. சனீஸ்வரரின்
அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது
நல்லது.
53. சனிபகவான்
தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும் என்கிறார் ஷீத்வா முனிவர்.
சனீஸ்வர தீபம்
முக்கூட்டு
எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை,
கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும்.
இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
இந்தத் தீபத்தைச்
சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம்,
வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம்.
இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும்
மகிழ்ச்சியையும் அளிக்கும்.
முக்கூட்டு
எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை,
கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும்.
இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
இந்தத் தீபத்தைச்
சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம்,
வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம்.
இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும்
மகிழ்ச்சியையும் அளிக்கும்.
ஸ்ரீசனி பகவான்
வழிபாடுகள்
1.உடல் ஊனமுற்றவர்களுக்கு
அல்லது அதை சார்ந்த பள்ளிகளுக்கு உதவி செய்தல்.
2.சனிக்கிழமை
விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல்.
3.அருகில்
உள்ள சிவ ஆலயங்களில் சிவ வழிபாடு செய்தல்.
4.சங்கடஹர
சதுர்த்தி அன்று மோதகம் வைத்து அருகம்புல் சாற்றி வழிபடுதல்.
5.ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு
வடை மாலை அல்லது வெற்றிலை மலை சாற்றி வழிபடுதல்
எத்தனை நண்பர்கள்
இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?
திருமணம்..........!
ஆயிரம் காலத்து பயிறாம். அது இரண்டு இதயங்கள் ஒன்றிணையும் ஒப்பந்த விழா.
இதற்கு பின் தான், இனிய இல்லறம் பிறக்க வேண்டும். தம்பதிகளுக்கு இடையே
சந்தோசம் திளைக்க வேண்டும்.
வம்சம் தழைக்க வாரிசுகள் பிறக்க வேண்டும். அது வாழையடி வாழையாக வளர
வேண்டும். இன்னார் பையன், இன்னாரது குடும்பம், இன்னாரது பரம்பரை
என்றெல்லாம் பெயரெடுக்க, இருமனம் கலக்கும் திருமணம் தான் முதல் படி.
இந்த திருமணத்தை நடத்திக்கொள்ள ஒரு ஆணும், பெண்ணும் அவசியம். அதை தாண்டி
வேறு ஒன்றும் இல்லை என்பது முற்போக்கு சிந்தனை. காரணம்... கால நேரம்
ஒத்துழைக்க வேண்டும்.
ஜாதகத்தில் திருமண திசை நடப்பில் இருக்க வேண்டும். இல்லை என்றால் திருமண யோகம் வராது.
சரிங்க... திருமண திசைதான் நடப்பில் இருக்கிறது. பொண்ணு மாப்பிள்ளை ரெடி. திருமணம் செய்து விடலாமா?
முடியாது.... குருபலம் எப்படி என்பதையும் பார்க்க வேண்டும். அதை பற்றி
வேறு ஒரு தலைப்பில் பார்ப்போம். சனி பகவானின் சஞ்சார நிலைகள் எப்படி
என்பதுதான் முக்கிய கேள்வி.
பொதுவா.... ஜோதிடர்கள் குத்து மதிப்பா போடுற குண்டு ஒன்னு இருக்கு. தம்பி.... உங்களுக்கு ஏழரைசனி நடக்குது.
ஏழரைசனின்னா என்ன? பெரிய செலவு காத்திருக்கிறது என்று அர்த்தம். கையில
மடில இருக்கிறதை வச்சு கல்யாணம் பண்ணு. கடனை உடனை வாங்கி நிலத்தை வாங்கு.
வீடு கட்டு.
அப்படி செய்துட்டா.... சனிபகவான் ஒன்னும் செய்யமாட்டார். பொழைச்சு போன்னு
விட்டுடுவார். அதை விட்டுட்டு காசை சேர்க்கிறேன் பேர்வழின்னு பேங்குல
பணத்தை போட்டா, விருந்துக்கு வச்சு இருக்கிற பணத்தை மருந்துக்கு செலவழிக்க
வைப்பார். கண்ட கண்ட செலவுதான் வந்து சேரும் சரியா.
சரிங்க..... இந்த வாதம் சரியா?
சரிதான். ஆனால் எல்லோருக்கும் பொருந்தாது.
எப்படி?
ஏழரைசனி வாழும் காலத்தில மூன்று முறை வரும். நம் தாத்தா காலத்தில நாலு
முறை வந்துச்சு. அதனால 100 வயசு தாண்டியும் வாழ்ந்தாங்க. இப்போ நாம
சாபிடுற சாப்பாடு, சுற்றுசூழல் சீர்கேடு எல்லாம் சேர்ந்து மூன்று சுற்றோடு
முடிவுக்கு வருகிறது ஆயுள்.
முதல் சுற்று மங்கு சனி, இரண்டாவது சுற்று பொங்கு சனி, முன்றாவது சுற்று மரணசனி.
இருக்கட்டும்.... ஏழரைசனி காலத்தில் திருமணம் செய்யலாமா?
எப்போதுமே..... அல்லல் படுத்தி ஆனந்த படுகிற சனி. கேள்வி கேட்டவரை பதில்
சொல்ல வைக்கிற சனி. அடுத்தவங்க கல்யாணத்தை பார்த்து ஆனந்த பட வைக்கிற
சனி, மாப்பிள்ளையாக மணபந்தளில் அமர வேண்டியவரை, மாப்பிள்ளை தோழனாக நிற்க
வைக்கும் சனி, கல்யாண யோகத்தை தருவாரா?
தருவார் என்பது உண்மைதான். அது சுவைக்குமா என்பதுதான் கேள்வி.
ஏழரைசனி என்பது எப்படியும் 20 வயதுக்குள் வந்துவிடும். முதல் சுற்றில்
திருமண யோகம் என்பது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஏழரை சனி துவக்கமான
விரைய சனி நடக்கும் பொது, திருமணம் செய்யக்கூடாது. அடுத்த பெயர்ச்சியான
ஜென்ம சனி காலத்தில் திருமணம் செய்யலாம்.
அது மட்டும் அல்ல. எந்த சுற்று சனியாக இருந்தாலும், சனி பகவான் ராசிக்கு
12 இல் விரைய சனியாக இருக்கும் போது, திருமணம் மட்டும் செய்யக்கூடாது.
செய்தால்?
திருமண வாழ்வில் தீராத குழப்பம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும்.
இருவரில் ஒருவருக்கு நோய் பீடித்து கொள்ளும். குழந்தை பாக்கியம் இல்லாமல்
போகலாம். மாங்கல்ய பலம் குறையலாம். மொத்தத்தில் திருமண வாழ்க்கையில்
சந்தோசம் நீங்கி, சந்தேகம் அதிகரிக்கும்.
அதனால்... விரைய சனி நடக்கும் காலத்தில் திருமணம் செய்யக்கூடாது.
kumbha lagna 11th place la saniswarar
ReplyDeletesani thasai thirumanan pannalaama
உங்கள் பதிவுகள் மிக அருமை நன்றி
ReplyDeleteநல்ல உபயோகமான தெளிவான பதிவு
ReplyDelete